Monday, November 29, 2010

அன்புள்ள சந்தியா

அன்புள்ள சந்தியா

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்   
என்னை எனக்கு தருவாயா? இல்லை காட்டில் விடுவாயா?
உந்தன் விடை எதிர்பார்த்து
இங்கே ஒரு இதயம் இங்கே ஒரு இதயம்


அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்




எந்த பக்கம் நீ செல்லும் போதும் எந்தன் காதல் ஆகாயமாகும்
கண்ணை மூடி கொண்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும் காலம் வந்தால் கல்வெட்டு அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலைபடுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வில் வேரடி



அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் 


தாயை கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளை போல என் காதலாகும் 
அன்பே அதை உன் கண்கள் அறியாதா ?
என்றோ யாரோ உன் கையை தொடுவார் இன்பம் துன்பம் எல்லாமே அறிவார் 
அன்பே அது நான் ஆகா கூடாதா ?
உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைகிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி




அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்   
என்னை எனக்கு தருவாயா? இல்லை காட்டில் விடுவாயா?
உந்தன் விடை எதிர்பார்த்து ஒ...ஓ....................
அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் ஒ...ஓ......................





Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3