Tuesday, January 25, 2011

தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு 
இரவின் மடியில் உலகம் தூங்கும் 
இனிய கனவில் தூங்கு 


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

Friday, January 14, 2011

பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே


பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட பாசம் 
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் பேசும் 
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை 
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை 



பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெலாம் சந்தோசம் தந்தாள் இவள் 

Tuesday, January 11, 2011

என் காதல் சொல்ல நேரம் இல்லை


என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் 
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம் 

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் 
i'll be there for you  i'll be there for you 
i'll be there for you  i'll be there for you 

Monday, January 10, 2011

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப

நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல
நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல 
ரொம்ப நல்ல புள்ளைகெல்லாம் நா செல்ல புள்ள இல்ல 

வெண்ணிலா பொறுக்கி புள்ள எச்சகல திருட்டு புள்ள 
எங்களுக்கு ஊரும் இல்ல பேர்மனன்ட்டு பேரும் இல்ல 
தட்டி கேக்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல 
சொந்தமுன்னு யாரும் இல்ல செண்டிமெண்டு ஏதும் இல்ல 

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே

வானம் நமதே பூமி நமதே 
காற்றும் நமதே கடலும் நமதே
ஒளியும் நமதே விழியும் நமதே 
வாழ்வோம் வா வா 

ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு கிழக்கே 
ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு விளக்கே 
ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு இலக்கே 
வாழ்வோம் வா வா 

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல்

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே 
காட்டுக்குள்ள பாடம் படிச்சாச்சே 
ரொம்ப பழைய உலகம் இப்ப புதுசா தெரியுதே 
அடியாத்தி ........இந்த அர்த்தத்துக்கு பேர்றென்ன
அடியாத்தி ..........இது அன்பு தானே வேறென்ன  

யாருக்காக இது யாருக்காக

யாருக்காக இது யாருக்காக

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

காதலே போ போ
சாதலே வா வா வா

Sunday, January 9, 2011

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
எம்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா 
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா 
நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா 
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா 
பாசமுள்ள மனிதனப்பா நான் மீச வச்ச குழந்தையப்பா 
என்றும் நல்ல தம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா 
தாலாட்டி வளர்த்தது தமிழ் நாட்டு மண்ணப்பா

ஆத்தாடி ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி

மயங்குரேண்டி மயங்குரேண்டி மனசுக்குல வட்டமிட்டு மயங்குரேண்டி 
நொறுங்குரேண்டி நொறுங்குரேண்டி கனவுக்குள்ள சிகிகிட்டு நொறுங்குரேண்டி
ஏங்குரேண்டி ஏங்குரேண்டி தனிமையில புத்தி கெட்டு ஏங்குரேண்டி  

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேண்டி
உன்னை தேடி உன்னை தேடி திசை மாறி போனேண்டி 

Saturday, January 8, 2011

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால

ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா 
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு 
நித்தம் குடிச்சி என கொன்னாடா 

ஏ பொட்டகாட்டுல ஆ லங்கட்டி மலபேஞ்சி ஆரொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஓட்டிகிச்சி 
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் 
தொட்ட பின்னால ஏதோ ஆநேண்டா 

Friday, January 7, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள்

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் 

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று 
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று 
என் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா 
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........
நம்புமா...........என் உள்ளம் நம்புமா ......

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று 
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று 

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா

கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா ஹே .....


கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவை தோற்கடிப்பா 

Sunday, January 2, 2011

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா 
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா 
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே 

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ 

Saturday, January 1, 2011

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்  ?
பூக்கள் தானே யாசித்தோம் கூழங் கற்களை ஏறிந்தது யார் ?


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?


உனை நான் உனை நான்

உனை நான் உனை நான்

உனை நான் உனை நான் உனை நான்........
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் ...........
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ........
லட்சம் சிறகுகள் முளைக்குதே 
நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?
ஜே ஜே உனக்கு ஜே ஜே ........ ஜே ஜே உனக்கு ஜே ஜே ........

உனை நான் உனை நான் உனை நான் 
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் 

நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்  
       நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
       நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் 
       நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்  

ஆண் :- நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3