பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று
என் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........
நம்புமா...........என் உள்ளம் நம்புமா ......
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று
உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே
பாரம்மா ........ என் வாழ்வே பாரமா .................
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீறுதே
தாங்குமா ............. என் உள்ளம் தாங்குமா...............
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவர் யார் ?
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவர் யார் ?
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததே
பொங்குதே ............கண்ணீரும் பொங்குதே..............ஓ.............
தங்குதே ............. உன் பிம்பம் தங்குதே............
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று
வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா.......... நான் என்ன பொம்மையா .............
ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகின்றேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாயமா .............என் கண்ணில் மாறுமா ..............
எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லைப்பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த
உயிர் திறக்கும் பயணம் இந்த திருப்பத்தில் முடிந்தது
ஓய்ந்ததே .......... என் காதல் ஓய்ந்ததே ...................ஓ.............
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே ..................
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்பும் பூத்தது ஏன் இன்று
என் கண்கள் பொய் சொல்லுமா வேரில்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா......உன் போல பிம்பமா.........ஓ ..........
நம்புமா...........என் உள்ளம் நம்புமா ......
ஹரிஹரனின் இனிய பாடல் மேலும் வர இருக்கின்றன .........
தொடர்ந்து வாக்களிக்கவும் ..........
அத்துடன் இப்பாடலை எனது நண்பன் தனேஷ் இற்கு சமர்பிக்கிறேன்................
உங்கள்