Tuesday, January 25, 2011

தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு 
இரவின் மடியில் உலகம் தூங்கும் 
இனிய கனவில் தூங்கு 


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா 
மண்ணில் நீரின் திவலையா 
நோயானேன் உயிரும் நீ யானேன் 
இரவில் காயும் முழு நிலா 
எனக்கு மட்டும் சுடும் நிலா 
வாராயோ எனை நீ சேராயோ 
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி 
நீயே வாடினாயோ 


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும் 
மடியில் சாய்ந்து தூங்கடா 
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா 
மலரின் காதல் பனிக்கு தெரியும் 
என் மனதின் காதல் தெரியமா 
சொல்ல வார்த்தை கோடி தான் 
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன் 
தூங்க வைக்க பாடினேன் 
நான் தூக்கமின்றி வாடினேன் 


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
நதியின்  மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு 
இரவின் மடியில் உலகம் தூங்கும் 
இனிய கனவில் தூங்கு 





உங்களுக்கு தேவையான பாடல் வரிகளை பெற்றுக்கொள்ள இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ளவும் அல்லது பேஸ்புக் மூலமாக அறியத்தரவும் 
உங்கள் 

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3