Monday, July 25, 2011

மாலை மங்கும் நேரம்

மாலை மங்கும் நேரம் 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் 
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் 
தீயாய் மாறும் தேகம் தேகம் 
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் 
வாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும் 

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து  
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும் 
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய் 
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும் 
நான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு 
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் 
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான் 
காலம் நேரம் தாண்டி வாழ்வோம் 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் 
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில் 
நம் மூச்சு காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும் 
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள் 
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சிணுங்கும் 
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்று 
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு 
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன் 
வாசம் தூணை நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் 
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் 
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன 
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்




வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3