Sunday, October 21, 2012

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க
நானோ  தனித்து நடக்க நீயோ மெளனமாக..
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன் 
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன் 
ஒரே ஒரு நொடி கூட உன்னோடுதான் வாழ்வேனே 
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன் 

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே 
ஒரே ஒரு பார்வையாலே உள்ளுர கரைகிறதே 

யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க



ஓ.......சிக்கிக் கொண்டு சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு இதயம் 
வெட்டிக் கொண்டு வெட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு இதயம் 
காதல் என்னும் கை குழந்தை கதறி அழுகிறதே 
உறவை நெனச்சி உள்ளம் இப்போ போராடுதே 


ஒரே ஒரு வார்த்தை கேட்டு என் நெஞ்சு வெடிசிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா என் மேல அடிசிருச்சே 


உள்ளுக்குள்ள முல்லா வச்சி எதுக்கு நீ சிரிச்ச 
காதல் என்னும் பேர  சொல்லி கழுத்த நீ நெரிச்ச 
உன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா 
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா 


ஒரே ஒரு வார்த்த பேச என்னால முடியலையே 
ஓரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சு பலமில்லையே


யாரோ மனச உருக்க ஏனோ உடைந்து வலிக்க
நானோ  தனித்து நடக்க நீயோ மெளனமாக..


கேட்க ............


தரவிறக்க ............



பார்க்க ..............




வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3