முன்னுரை
நெருப்பிலும் நீர் வலியது
நீரிலும் காற்று வலியது
காற்றிலும் கண்ணீர் வலியது
ஆனால்,
கண்ணீரிலும் வலியது கவிதைகள்
கவிதைகள் கண்ணீரை துடைக்கும்
கவிதைகள் துயரம் துடைக்கும்
இவ்வாறு கண்ணீரை கண்டு
கரைந்து போன உள்ளமும்
துயரத்தை கண்டு
துவண்டு போன நெஞ்சமுமே
இக்கவிதை தொகுப்பின்
முதல் பொறி
இக்கவிதைகள் என் நெஞ்சத்தில்
எழுந்த எண்ணங்களின் தொகுப்பு
இது ரசிப்பவருக்கு கவிதை
வெறுப்பவருக்கு கலங்கல் நீர்
நீங்கள் ரசிப்பதுதான்
நான் செய்த பாக்கியம்
நம்பிக்கைகளோடு
என் முன்னுரைக்கு முற்றுப்புள்ளி.
என்றும் உணர்வுகளோடு
எஸ். கமலநாதன்