Monday, July 26, 2010

தனிமையில் நான்

தனிமையில் நான் 

வீதி விளக்கு மின்னுகிறது 
இரவு நேரம் 
சுழன்று அடிக்கிறது குளிர் காற்று 
ஆனால், என் இதயம் மட்டும் எரிகிறது 

எதனால் கண் கலங்கினாய் ?
எதனால் பிரிந்தாய் ?
கடல்கரையில் காலாற நடை போடவந்தோம்
கனவிலும் நினைகாதவாறு விடை பெற அல்ல 

நீ சொன்ன வார்த்தை 
என்னை நிறுத்தி விட்டது தனிமையில் 
குமுறுகிறது என் இதயம் - காரணம் 
என் இதயம் குற்றமற்றது

என்னை விட்டு விடு , பிரிந்து விடு 
என்று சொன்னாய் - ஆனால் 
உன் வார்த்தையில் இரண்டாகிய 
இதயத்தை ஒட்டாமல் சென்று விட்டாய் 

வாடுது மனம் தனிமையில் 
வாட்டுது உன் நினைவுகலில்...............................

                              ---- DDR ----

இக் கவிதை தனேஷ் பிரியன் என்பவர் 
விரும்பி கேட்ட தலைப்பில் தரப்படுகிறது ......




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3