Thursday, July 15, 2010

எதை கொண்டுதான் தடுப்பதோ.................?

விளக்கினை நாடி வந்து - வினையை
தேடி கொள்ளும் விட்டிலை - நானும் 
உன்னில் என்னை இழந்து
உருகி தவிக்கின்றேன்
பிறவி செய்த பிழைதான் - நானும்
உன்னை கண்டது என்றால்
உன்னில் என்னை இழந்தது மட்டும்
எப்படி என் குற்றம் உயிரே !
இந்த வழி அன்றே தெரிந்திருந்தால்  
நான் தொலைந்திருப்பேனா 
தெரிந்தே இருந்தாலும் ஒதுங்கிதான் இருப்பேனா 
அந்த வழி தெரிய நியாயம் இல்லை என்பதை விட 
தெரிந்திருந்தாலும்...........................................
அணை மீறிய வெள்ளம் போல் 
எனை மீறிய என் காதலை 
எதை கொண்டுதான் தடுப்பதோ.................?




Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3