எதை கொண்டுதான் தடுப்பதோ.................?
விளக்கினை நாடி வந்து - வினையை
தேடி கொள்ளும் விட்டிலை - நானும்
உன்னில் என்னை இழந்து
உருகி தவிக்கின்றேன்
பிறவி செய்த பிழைதான் - நானும்
உன்னை கண்டது என்றால்
உன்னில் என்னை இழந்தது மட்டும்
எப்படி என் குற்றம் உயிரே !
இந்த வழி அன்றே தெரிந்திருந்தால்
நான் தொலைந்திருப்பேனா
தெரிந்தே இருந்தாலும் ஒதுங்கிதான் இருப்பேனா
அந்த வழி தெரிய நியாயம் இல்லை என்பதை விட
தெரிந்திருந்தாலும்...........................................
அணை மீறிய வெள்ளம் போல்
எனை மீறிய என் காதலை
எதை கொண்டுதான் தடுப்பதோ.................?