கண்ணம்மா
கஞ்சி கொண்டு போறாளே கண்ணம்மா
கஞ்சி சட்டியில் இருப்பது என் உசுரம்மா
என் உசுரு ஒன்னும் பெருசு இல்ல
பிடிங்கி கொண்டு போ
ஆனால், என் மனதுக்காக சொல்லி விடு
அந்த மூணு வார்த்த
உன் கையால் தரும் கஞ்சி ருசிக்கும்
கடிக்க தரும் மிளகாய் உறைக்கும்
நீ தரும் புன்னகை இனிக்கும்
ஆனால், உன் மௌனம் மட்டும் வாட்டுதம்மா
மூடி மறைக்காத மனசை
உன்னால் நான் மூடி போவேன் மண்ணுல
மனச தொறந்து விடு - இல்ல
விஷம் எடுத்து தந்து விடு
ஆனால் பாவம் !
விஷம் கூட உன் கை பட்டு
தேனாக இனிக்குதடி
கண்ணம்மா ....................................
இக் கவிதை DDR இன் முதல் கிராமியசாயலில்
எழுந்த கவிதை ................................
இப்படிக்கு உங்கள் DDR