Saturday, July 24, 2010

கண்ணம்மா

கண்ணம்மா 

கஞ்சி கொண்டு போறாளே கண்ணம்மா 
கஞ்சி சட்டியில் இருப்பது என் உசுரம்மா 

என் உசுரு ஒன்னும் பெருசு இல்ல 
பிடிங்கி கொண்டு போ 
ஆனால், என் மனதுக்காக சொல்லி விடு 
அந்த மூணு வார்த்த 

உன் கையால் தரும் கஞ்சி ருசிக்கும் 
கடிக்க தரும் மிளகாய் உறைக்கும்
நீ தரும் புன்னகை இனிக்கும் 
ஆனால், உன் மௌனம் மட்டும் வாட்டுதம்மா

மூடி மறைக்காத மனசை 
உன்னால் நான் மூடி போவேன் மண்ணுல
மனச தொறந்து விடு - இல்ல 
விஷம் எடுத்து தந்து விடு 

ஆனால் பாவம் !
விஷம் கூட உன் கை பட்டு 
தேனாக இனிக்குதடி 
கண்ணம்மா ....................................

    இக் கவிதை DDR இன் முதல் கிராமியசாயலில்         
    எழுந்த கவிதை ................................
                           இப்படிக்கு உங்கள் DDR 



Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3