Wednesday, March 16, 2011

இல்லை என்று சொல்ல............

இல்லை என்று சொல்ல 


இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் 
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்ல போகிறாய் ?............

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் 
நியாயமா ? நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா ? மௌனமா ?


அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே 
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே 
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் 
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்ல போகிறாய் ?

இதயம் ஒரு கண்ணாடி உனது விம்பம் வீழ்ந்ததடி 
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி 
கண்ணாடி பிம்பம் கட்ட கயிறொன்றும் இல்லையடி 
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி 
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே 
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில் 
என்னை துரத்தாதே உயிரே கரையேறாதே 



இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் 
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்ல போகிறாய் ?............

என்ன சொல்ல போகிறாய் ?............


சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் 
நியாயமா ? நியாயமா ?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா ? மௌனமா ?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது ?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி 
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி 
பல உலக அழகிகள் கூடி உந்தன் பாதம் கழுவலாம் வாடி 
என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன ?
என்னை புரியாத இது வாழ்வா ? சாவா ?

என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் 
என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் 
நியாயமா நியாயமா....... என்ன சொல்ல போகிறாய்
மௌனமா மௌனமா......என்ன சொல்ல போகிறாய்






வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3