கனவே கலைகிறதே
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிரதே
காதல் இதுதான உலகெல்லாம் வலிகள் பொதுதானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவது முறைதானா
வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே
தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா ?..............
இது தானா காதல் இது தானா வேரருந்தே வீசும் புயல் தானா
இது தானா காதல் இது தானா அணு அணுவாய் சாவும் வலிதானா
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிரதே
காதல் இதுதான உலகெல்லாம் வலிகள் பொதுதானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவது முறைதானா
அழைப்பது கானல் நீர அறியாத பறவை கூட்டம்
தொடு வானம் போலே காதல் அழகான மாயத்தோற்றம்
உனக்கான வார்த்தை அநியாயம் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும் முன்னே உதிர்கிரதே
தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்
சரிதானா காதல் பிழை தானா ஆயுள் வரை தொடரும் வலிதானா
இது தானா காதல் இது தானா ஐம்புலனில் ஐயோ தீயானால்
மழைநீர் சுடுகிறதே மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிரதே
இந்த பாடல் வரிகளுடன் மேலும் உங்களுக்கு பிடித்த பாடல்களை எனக்கு கூறுவதன் மூலம் பாடல் வரிகளை பெற்று கொள்ளுங்கள் ...............
உங்கள்