Tuesday, February 22, 2011

ஒரு மணி அடித்தால்

ஒரு மணி அடித்தால்


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே 
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே 
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ 
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ 

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 


வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா 
தென்றல் போல எங்கும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் 
தேடி உன்னை பார்த்து பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து 
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன் 
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன் 
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் மெழுகானேன்
மேடை தோறும் பாடல் தந்த வான்மதியே 
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே 

போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே 
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே 

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிரண்டும் போவதென்றால் 
கண்ணிரண்டும் நான் இழப்பேன் இப்போதே நான் இப்போதே 
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதேன்றால் 
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே இமை மூடாதே 
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன் 
சோதனை இனி தேவையா?  சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே 
காணலாமோ ராகம் நின்று போவதையே 

போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே 
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே 

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் 




இந்த இனிய பாடலை எனது நண்பன் டில்ஷான் இற்கு சமர்பிக்கிறேன் ..........


உங்கள் நபர்களுக்காகவும் நீங்கள் பாடல்களை இங்கு கேட்கலாம் ...............


அத்துடன் இங்கு இருக்கும் விளம்பரங்களில் click செய்வதன் ஊடாக என்னக்கு சிறு வருமானம் பெறவும் வழிசெய்யலாம் .............................


அது உங்கள் விருப்பம் .....................
உங்கள்  

Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3