Friday, April 15, 2011

என்னவளே அடி என்னவளே

என்னவளே அடி என்னவளே 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் 
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று 
உந்தன் காலடி தேடிவந்தேன் 
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று 
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன் 
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து 
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 


வாய்மொழியும் எந்தன் தாய் மொழியும் 
இன்று வசப்படவில்லையடி 
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு 
உருண்டையும் உருளுதடி 
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் 
ஒரு நிமிசமும் வருசமடி 
கண்கள் எல்லாம்  நம்மை பார்ப்பது போல் 
ஒரு கலக்கமும் தோன்றுதடி 
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி 
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் 
உன் வார்த்தையில் உள்ளதடி 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 

கோகிலமே நீ குரல் கொடுத்தால் 
உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன் 
கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு 
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் 
வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க 
உந்தன் விரலுக்கு சுளுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் 
கொஞ்சம் வடி கட்டி அனுப்பி வைப்பேன் 
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் 
உன் காலடி எழுதிய கோலங்கள் 
புது கவிதைகள் என்றுரைப்பேன் 

என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் 

எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் 
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று 
உந்தன் காலடி தேடிவந்தேன் 
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று 
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன் 
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து 
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் 

கேட்க .......................




பார்க்க ...........




தரவிறக்க ............


click


வாசகர்களே !  இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள் 
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3