என்னவளே அடி என்னவளே
என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிசமும் வருசமடி
கண்கள் எல்லாம் நம்மை பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி
என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சுளுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடி கட்டி அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்றுரைப்பேன்
என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்துவரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
கேட்க .......................
பார்க்க ...........
தரவிறக்க ............
click |
வாசகர்களே ! இந்த பாடல் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ......... அத்துடன் இங்குள்ள விளம்பரங்களில் click செய்வதன் மூலம் சிறு வருமானம் பெற உதவுங்கள் .......................
உங்கள்