Monday, December 20, 2010

விழிகளில் விழிகளில் விழுந்து

விழிகளில் விழிகளில் விழுந்து

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்


யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்




விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்


சாலையில் நீ போகயிலே மரம் எல்லாம் கூடி முனு முணுக்கும்
காலையில் உன்னை பார்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி 
ஒரு காபன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய் 
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்பே எங்கே ஓடுகிறாய் 
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே 
போனாலே நீ போனாலே என் வாழ் நாள் சொற்பமே 



விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாள்
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் 

பூவிலே செய்த சிலையல்லாவா பூமியே உனக்கு விலையல்லவா 
தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே என்னக்கு வரமல்லவா 
மேகமாய் அங்கு நீயடி தாகமாய் அங்கு நானடி 
உன் பார்வை தூரலில் விழுந்தேன் அதனால் காதலும் குளித்ததடி 
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே 
ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே 



எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாள்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் 

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்






 MySpacePlaza.com
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3