உந்தன் தேசத்தின் குரல்
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா......
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா ...............
அந்த நாட்களை நினை அவை நீங்குமா உன்னை நிழல் போல் வராதா ........
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா ...............
வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எனும் தாய் நாட்டில்
சந்தர்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா .................
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா......
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா ...............
கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாம்பூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னதோப்பு துரவுகள் அழைக்க கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ன நிலா சோறு தான் அழைக்க
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா......
பால் போல் உள்ள வெண்ணிலவு பார்த்தால் சிறு கறையிருக்கு
மலர் போல் உள்ள தாய் மண்ணில் மாறாத சில வலியிருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உன் பயிர்கள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடியுன்னை அழைக்குதே தமிழா ..................
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா......
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா ...............