Monday, December 27, 2010

சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சில் முட்களாய் தைத்தாய் 
என் விழியில் வாள் கொண்டு வீசி
இளம் மனதில் காயங்கள் தந்தாய்
துன்பம் மட்டும் என் உறவா ? உன்னை காதல் செய்ததே தவறா ?
உயிரே ................உயிரே .............


காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் 
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே


காதல் வெறும் மேகம் என்றேன்  
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூடினாய்
முடியாமல் இருந்தேனே உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே
மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா ?
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா ?


காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் 
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே


துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவனானேன் என் விடையும் நீ என
வந்தாயே என் வழியில் காதல் தந்தாயே உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்
உன் காதல் வேறோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை


காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் 
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே



Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3