ஆ :- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்து விடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்து விடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர் தாங்கி நான் இருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீ குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயர் இல்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே
அதற்காக தான் பாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்து விட்டேன்
பெ :- உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்து விட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்து விட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்து விட்டேன்
ஆ :- காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்து விடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
பெ :- ஓர் பார்வை பார்த்தேன் உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது மறு கண்ணும் தூங்கிடும
நான் கரும்பாறை பல தாண்டி வேறாக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேற்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
ஆ :- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்து விடு
பெ :- மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் உன்னோடு மறைந்துவிட்டேன்
உயிரே உயிரே உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்