Saturday, December 18, 2010

யாரது யாரது

யாரது யாரது

யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது 
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது


யாரது யாரது யாரது யார் யாரது


என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள் மனம் நினைப்பது அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யார் யாரது


உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என மனதினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்


யாரது யாரது யாரது யார் யாரது


சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது
யாரது யாரது யாரது யாரது


நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது 
விஞ்ஞான கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைப்பது






 MySpacePlaza.com
Name:
Email:
Comment:
 

ad1

ad2

ad3